பெண் கைதி மேலாடைக் கழற்றி அட்டகாசம்!!

Read Time:2 Minute, 46 Second

woman-006விளக்கமறியலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் கைதி ஒன்பது பேருக்கு மத்தியில் மேலாடைக் கழற்றி அட்டகாசம்: தங்களை இக்கட்டான நிலைக்குள் தள்ளியதாக பொலிஸார் நீதிமன்றில் முறைப்பாடு-

நீதிபதியின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைப்பதற்காக ஜீப் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட ஒன்பது பேர் அடங்கிய சந்தேகநபர்களில் இருந்த பெண்ணொருவர் பொலிஸ் ஜீப்வண்டிக்குள் வைத்து தமது மேல்லாடைகளை கழற்றி ஜீப் வண்டிக்குள் கூச்சல் குழப்பம் எற்படுத்த முயற்சித்த சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.

பதுளை அமுனுவெலபிட்டிய பகுதியில் காணி தகராறு ஒன்றுக்காக பொலிஸினால் கைது செய்யப்பட்டிருந்த ஒன்பது பேர் அடங்கிய குழுவொன்றை நீதிபதி முன்னிலையில் நிறுத்திவிட்டு மீண்டு விளக்கமறியலில் வைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் ஜீப் வண்டியில் பதுளை புறநகரப் பகுதியிலிருந்து பதுளை பொலிஸ் நிலையத்தை நோக்கி அழைத்து வரும்போது அதிலிருந்த பெண்ணொருவர் திடீரென ஜீப் வண்டிக்குள் தமது மேலாடைகளை களைந்து கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்தி பொலிஸாரை இக் கட்டான நிலைக்குட்படுத்தியதாக பொலிஸார் நீதிமன்றில் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.

அதனால் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர்களை தொடர்ந்து நீதிமன்றில் வைக்குமாறு நீதிமன்றை பொலிஸார் கேட்டுக் கொண்டனர்.

இதன்படி குறித்த நபர்கள் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு நேற்று மீண்டும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டப்போது ஒருவருக்கு சரீரப்பிணையாக தலா ஒரு லட்சம் ரூபா வீதமும் பணத்தில் ஐயாயிரம் ரூபாவும் அபராதம் விதிப்பதாகவும் உத்தரவிட்ட நீதிபதி குறித்த நபர்களை கடுமையாக எச்சரித்து பிணையில் விடுவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிப் கிஸ் கொடுக்க நடிகையை மிரட்டிய நடிகர்!
Next post ஆசிரியையின் நிர்வாணப் படத்தை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி, கப்பம் கோரிய நபர் கைது