ஆசிரியையின் நிர்வாணப் படத்தை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி, கப்பம் கோரிய நபர் கைது

Read Time:2 Minute, 36 Second

t.phone-sowerபாடசாலை ஆசிரியையொருவரின் நிர்வாணப் படங்களைக் கூறி அச்சுறுத்தி மூன்று லட்ச ரூபா கப்பம் கோரிய 21 வயது இளைஞரொருவரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி நாவலபிட்டிய நீதிவான் நீதிமன்ற நீதிபதி எல்.கே.மாறித்த உத்தரவிட்டார்.

நாவலபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டராவார்.

நாவலபிட்டி நகரிலுள்ள பாடசாலையொன்றின் திருமணமாகாத ஆசிரியையே இவ்வாறு அச்சுறுத்தப்பட்டவராவார்.

இந்த ஆசிரியையின் கைப்பையிலிருந்து அவரது படங்கள் சில மாதங்களுக்கு முன்னர் காணாமற் போன படங்களை உபயோகித்து யாரோ ஒரு சிலர் இவர் பெயரில் போலி விலாசத்துடன் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்துள்ளனர்.

இதனால் கலவரமுற்ற இந்த ஆசிரியையின் தொலைபேசிக்கு வந்த அழைப்பில் மூன்று லட்ச ரூபா கப்பம் தரும்படியும் இல்லாவிட்டால் நிர்வாண படங்களை வெளியிடபோவதாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

தன்னிடம் மூன்று லட்ச ரூபா பணமில்லை எனவும் 50000 ரூபா தருவதாகவும் இந்த ஆசிரியை அந்த நபரிடம் தெரிவித்ததுடன் அச்சம் காரணமாக இது குறித்த இரகசியமாக நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்துஅந்த நபர் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பணத்தை எடுத்து வரும்படி கூறியதை அடுத்து ஆசிரியையும் சிவில் உடையில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றுள்ளனர்.

அந்த நபர் இரண்டு மணித்தியாலமாக இடத்தை மாற்றி கூறி இவர்களை அலைய விட்டுள்ளனர். இறுதியில் நாவலப்பிட்டி ரயில் நிலையத்துக்கருகில் பணத்தைப் பெற வந்த போது இந்த நபர் கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் கைதி மேலாடைக் கழற்றி அட்டகாசம்!!
Next post மரணித்த மகனுக்கு ஐந்து நாட்களாக உணவு ஊட்டிக் கொண்டிருந்த தாய்