மரணித்த மகனுக்கு ஐந்து நாட்களாக உணவு ஊட்டிக் கொண்டிருந்த தாய்

Read Time:1 Minute, 49 Second

quest-01மரணித்த தனது மகனுக்கு தாய் ஒருவர் வீட்டில் வைத்து ஐந்து நாட்களாக உணவு ஊட்டிய மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று கொழும்பு நுகேகொட, கங்கொடவெல, பழைய கெஸ்பா வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

60 வயதான தாயொருவர் தனது உயிரிழந்த 27 வயது மகனுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் உணவு ஊட்டியுள்ளார்.

இந்த தாயும் அவரது மகனும் குறித்த வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளனர்.

மகன் உயிரிழந்து கட்டிலின் மீது காணப்பட்ட நிலையில் நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை அறியாத மானநோயாளியான தாய் தொடர்ந்து ஐந்து நாட்கள் இவருக்கு உணவூட்டி இருக்கின்றார்.

அயலவர்கள் குறித்த வீட்டியிலிருந்து துர்வாடை வருவதை உணர்ந்து சென்று பார்த்த போதே அந்த நபர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பிரதேசவாசிகள் அவ்வீட்டுக்கு சென்ற போது எனது மகன் எவ்வளவு அழகாக உணவு சாப்பிடுகின்றான் பாருங்கள் என்றும் அந்த தாய் கூறியுள்ளார்.

பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததைத் தொடர்ந்து பொலிஸார் அங்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிரியையின் நிர்வாணப் படத்தை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி, கப்பம் கோரிய நபர் கைது
Next post சிறுமிக்கு ஆபாச படம் காட்டியவருக்கு 5 வருடங்கள் சிறை