தாயைத் தாக்கி, அசிட் வீசி தப்பிய, கர்ப்பிணியான மகள்
Read Time:1 Minute, 19 Second
காணி பிரச்சினை காரணமாக தனது தாயை தாக்கி அவர் மீது அசிட்டை ஊற்றிவிட்டு தப்பிச்சென்ற மகளை கடந்த 6ஆம் திகதி இரவு ஓப்பநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கர்ப்பிணியான சந்தேக நபரை பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவரை நாளை 11ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதிபதி லலித் கன்னங்கர உத்தரவிட்டார்.
ஓப்பநாயக்கஇ ஹத்ஹெல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஜயமாலி தில்ரூக்ஷி என்ற பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவர்.
தாய்க்கு சொந்தமான காணியை தம் பெயருக்கு மாற்றும்படி இப்பெண் தாயை வற்புறுத்தி வந்ததாகவும், தாய் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்ததாகவும் ஏற்பட்ட சச்சரவை அடுத்து தாயை தாக்கி அவர் மீது அசிட் ஊற்றிவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
Average Rating