ஆலய குளத்திற்குள் வீழ்ந்து குழந்தை பலி
Read Time:1 Minute, 22 Second
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறையில் ஆலய குளத்தில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
மாவிலங்குதுறையில் உள்ள மகா காளியம்மன் ஆலய வளாகத்தில் உள்ள குளத்தில் விழுந்து சுதர்சன் கிருத்திக்கா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
ஆலய வளாகத்தில் சிரமாதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில் தாய் குளந்தையினை இருத்திவிட்டு சிரமதான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது குளத்திற்கு அருகில் சிறுவர்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் குழந்தை தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating