மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோகம்
Read Time:1 Minute, 23 Second
ஹட்டன் கொட்டியாகல பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் தொடர்பில் தமக்கு நேற்று அறிவிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று விசாரணைகள் ஆரம்பிக்க்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொட்டியாகல பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமியே நான்கு பேரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைகளுக்காக சிறுமி நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்பட்வில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating