யுவதியை ஏமாற்றி அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது

Read Time:1 Minute, 37 Second

love-bad-01யுவதியொருவரை ஏமாற்றி பலப்பிட்டிய மாதுகங்கைக்கு அருகில் கைவிடப்பட்ட ஹோட்டலொன்றுக்கு அருகிலுள்ள கற்பாறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் ஒருவர் கரந்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது இம்மாதம் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி பலபிட்டிய நீதவான் நீதிமன்ற நீதிபதி அசங்க போதரகம உத்தரவிட்டார்.

கரந்தெனிய தங்கங்கவெல பகுதியைச் சேர்ந்த இருபிள்ளைகளன் தந்தையான 24 வயது நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.

கரந்தெனிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் தனது மகளை சந்தேக நபர் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாக மாணவியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யுவதியை வைத்திய சான்றிதழ் ஒன்றை பெற்றுக் கொள்வத்காக பலபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். அரியாலையில் பிடிபட்டது ஆறரை அடி முதலை
Next post நலன்புரி முகாமில் தங்கியிருந்த ஆவா குழு​வைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் கைது