நலன்புரி முகாமில் தங்கியிருந்த ஆவா குழு​வைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் கைது

Read Time:2 Minute, 6 Second

avva-groub-2இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தினை சுற்றிவளைத்து ஆவா குழு​வைச் சேர்ந்த ஆறுபேரை பொலிஸார் இன்று அதிகாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர் என்று யாழ். சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் அண்மைக்காலமாக ஆவா மற்றும் டினோ, டில்லு போன்ற சமூகவிரோதக் கும்பலைச் சேர்ந்த நபர்கள் பலர் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ள நிலையில், நலன்புரி நிலையத்தில் வைத்து ஆறு இளைஞர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை கொள்ளை ஆட்கடத்தல், வாள்வெட்டு போன்ற சம்பங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டே இவர்களை பொலிஸார் கைதுசெய்துவருகின்றனர்.

அண்மைக்காலமாக யாழில் அதிகரித்து வரும் சமுகவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்டப் பிரதிப் பொலிஸ மா அதிபர் தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.

சுன்னாகம் பொலிஸாருடன் இணைந்து பொலிஸ் விசேட குழுவினரே இவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற பொலிஸார் ஆவாகுழு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை முடக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுவதியை ஏமாற்றி அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது
Next post காருடன் நீரில் மூழ்யவர், தன்னை காப்பாற்றியவர்களுக்கு எதிராக வழக்கு