அரசியலுக்கு வருவது உறுதி நடிகை நமீதா பேட்டி
”நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது” என்று நடிகை நமீதா கூறினார்.
நடிகை நமீதா, நேற்று ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
”நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இப்போது அதுபற்றி அதிகமாக பேசமுடியாது. நல்ல விஷயம் நடக்கும் முன்பு, அதுபற்றி வெளியே எதுவும் பேசக்கூடாது” என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள்.
எனக்கு தேசிய அரசியலில் ஆர்வமில்லை. என் உயிர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது தமிழ்நாட்டில்தான் பிரியவேண்டும்.
16 வயதில் நான் குஜராத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். பெரும்பாலான கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். நான்கைந்து வருடங்களில் என்னை, தமிழ் ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தேன். நான் சென்னைக்கு வந்து 11 வருடங்கள் ஆகிறது.
இன்னும் என்னை, ரசிகர்கள் மறக்கவில்லை. தமிழக மக்கள், என்மீது அன்பு செலுத்துகிறார்கள். பாசமாக பழகுகிறார்கள். பதிலுக்கு அவர்களுக்கு நான் ஏதாவது செய்யவேண்டும். அதை அரசியல் மூலம் செய்யலாம் என்று ஆசைப்படுகிறேன்.
டெல்லி மாணவி நிர்பயா கற்பழிப்பு சம்பவத்துக்குப்பின், இந்திய மக்கள் மனதில் நிறைய மாற்றமும், விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.
எனவே, இந்த தேர்தலில் நிறைய ஓட்டுகள் பதிவாகும். ஒரு சின்ன கறுப்பு புள்ளிக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை இந்த தேர்தலில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு நடிகை நமீதா கூறினார்.
Average Rating