பிள்ளைகள் கவனிக்கவில்லையென, மனம் வருந்தி விசம் அருந்திய பெற்றோர்
Read Time:1 Minute, 10 Second
தனது பிள்ளைகள் தம்மை கவனிப்பதில்லை என்ற மனக்கவலையில் விஷம் அருந்திய பெற்றோரில் தாய் உயிரிழந்து தந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் மாவட்டத்தின் நவகத்தேகம – கிரிமெட்டியாவ பகுதியில் வசிக்கும் 65 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
72 வயதுடைய தந்தை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்ற நிலையில் மூவரும் திருமணம் முடித்து தனித்தனியே வாழ்ந்து வருவதுடன் பெற்றோர் தனிமையில் இருக்கின்றனர்.
தமது பிள்ளைகள் தம்மை கவனிக்கத் தவறியதால் மனக்கவலை அடைந்த பெற்றோர் விஷம் அருந்தியுள்ளனர்.
Average Rating