50 நாட்களை நிறைவு செய்துள்ள கோலி சோடா
பெரிய நட்சத்திர நடிகர்களோ, விளம்பரங்களோ இல்லாமல் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்த ‘கோலி சோடா’ வெற்றிகரமாக 50 நாட்களை நிறைவு செய்துள்ளது.
ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான எஸ்.டி.விஜய் மில்டனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் தங்களுடைய சொந்த அடையாளத்தை உருவாக்கப் பாடுபட்ட நான்கு சிறுவர்களைப் பற்றிய கதையாகும்.
வெறும் வாய் விளம்பரங்களே இந்தப் படத்தின் உயர்வுக்குக் காரணமாக இருந்துள்ளது. நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் இந்தப் படம் பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தப் படம் பெரிய வெற்றியை அளித்துள்ளது. 2 கோடிக்குள்ளான பட்ஜெட்டில் தயாரிக்கபப்ட்ட இந்தப் படம் இதுவரை 12 கோடி வசூலித்துள்ளது.
இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்ட இயக்குனர் தன்னுடைய பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கையில் இதுவே மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்டார்.
Average Rating