யாழில் பஸ் மீது கல்வீச்சு..
Read Time:1 Minute, 0 Second
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்துக் கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான (சீ.ரி.பி) பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏ9 வீதியில் மடத்தடி பகுதியில் இன்று முற்பகல் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதலின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பஸ்ஸின் கண்ணாடி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating