புதுக்குடியிருப்பில் சந்தேகத்தில் இருவர் கைது..

Read Time:1 Minute, 7 Second

arrest-016முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் சந்தேகத்தின்பேரில் இருவர் பயங்கரவாத பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே இடத்தைச் சேர்ந்த சகோதரர்களான யோ.கலாதரன் (வயது 36), யோ.சுதாகரன் (வயது 29) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

டிராக்டர் சாரதிகளான இவர்கள் மதிய உணவிற்காக வீட்டுக்கு வந்திருந்தபோது திடீரென அங்கு வந்த பொலிசார் புகைப்படம் ஒன்றைக் காண்பித்து கலாதரனைக் கைது செய்தனர்.

இந்நிலையில் கலாதரன் கைது செய்யப்படுவதை புகைப்படம் எடுத்ததால் அவரது தம்பி சுதாகரனும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் விசாரணைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெடிவிபத்தில் சிறுமி பலி..
Next post நகைக்கடை உரிமையாளரை காருடன் கடத்தி கொள்ளை..