கழுத்து அறுபட்ட நிலையில் ரோட்டில் ஓடிய பெண்
காசிமேடு ஜீவரத்தினம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் 2–வது தளத்தில் குடியிருப்பவர் சுரேஷ். இவரது மனைவி சரண்யா (20). இவர்கள் கூட்டு குடும்பமாக உள்ளனர்.
கோவில் பூசாரியாக இருக்கும் சுரேசின் தம்பி தினகர் வீட்டில் இருந்தார். காலை 11 மணி அளவில் தினகர் கையில் ரத்தக்கறையுடன் வீட்டில் இருந்து ஓடினார்.
அவரைத் தொடர்ந்து சரண்யாவும் கழுத்து அறுப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் இருந்து ரோட்டுக்கு ஓடி வந்தார்.
அப்போது அங்கு வந்த காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் அந்த பெண்ணை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவரது கழுத்து, முதுகு, முகம் ஆகிய இடங்களில் கத்தி குத்து காயம் இருந்தது. கண்ணில் யாரோ மிளகாய் பொடி தூவி தன்னை தாக்கியதாக சரண்யா கூறினார்.
இதுகுறித்து தினகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating