நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது தவறு -யாழ்.மாநகர முதல்வர்
Read Time:1 Minute, 5 Second
நீதிமன்றில் வழங்கப்படும் தீர்ப்பை எந்த விதத்திலும் நாம் விமர்சிக்க முடியாது என யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
இன்று காலை யாழ் மாநகர அலுவலக கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ் நல்லூர் அம்மன் வீதியில் மசாஜ் நிலையம் என்னும் பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டது தொடர்பில் உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு ஊடகவியலாளர் ஒருவர் யாழ் மாநகர சபை முதல்வரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating