சீர்திருத்த இல்லத்திலிருந்து தப்பிய இளவயது கர்ப்பிணிகள்
சீர்திருத்த இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் இள வயது கர்ப்பிணிகள் இருவர் கல்பிட்டிய காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டம் கல்பிட்டிய – நாரக்கல்லிய பிரதேசத்தில் பேரூந்து தரிப்பு நிலையத்தில் நின்றிருந்தவேளை இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் – கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதானவரும், உடுகம மொரகஹயாய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதானவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாங்கள் மூன்று மாத கர்ப்பிணிகள் என கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நீதிமன்ற பணிப்பின் பேரில் மொரட்டுவயில் அமைந்துள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் விடப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து அவர்கள் எதற்காக தப்பிச் சென்றார்கள் என்பது குறித்து இதுவரையில் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
இந்த நிலையில் இந்த சிறுமிகள் இருவரும் இன்று மீண்டும் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளனர்.
Average Rating