பெங்களூரில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து, 2 மாணவிகள் தற்கொலை!
Read Time:1 Minute, 19 Second
பெங்களூரில் 15 மற்றும் 16 வயது மாணவிகள் தண்ணீர் தொட்டியில் பிணமாகக் கண்டு பிடிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும், தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவிகள், பள்ளி வளாகத்தில் ஹோலிப் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
இதனால், அவர்களை பள்ளி முதல்வரின் அலுவலகத்திற்கு வெளியில் நிற்க வைத்து தண்டனை கொடுத்துள்ளனர்.
இதனால் அவமானமடைந்த மாணவிகள் இருவரும், பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லவில்லை. இதையடுத்து அவர்களின் பெற்றோர், காவல்துறையின் உதவியை நாடினர்.
போலீசார் விசாரணையை தொடங்கியபோது, தண்ணீர் தொட்டிக்குள் இரு மாணவிகளும் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating