பாடசாலை சீருடையுடன் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: மாணவன் கைது

Read Time:2 Minute, 19 Second

rape.sexமாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக மாணவனொருவன் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் மாணவி பதுளை மாவட்டம் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பகுதியின் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த மாணவி, பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது அதே பாடசாலை மாணவன் அம்மாணவியை ஆட்டோ ஒன்றில் கூட்டிச் சென்று உடகும்பல்வெல என்ற இடத்தின் வீடொன்றில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளான்.

இது தொடர்பாக எல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட வீட்டைச் சுற்றிவளைத்து சம்பந்தப்பட்ட மாணவனையும் மாணவியையும்
கைது செய்துள்ளனர்.

அத்துடன் இவ்விருவரையும் ஏற்றி வந்த ஆட்டோ சாரதியையும் கைது செய்த பொலிஸார் குறிப்பிட்ட ஆட்டோவையும் தடுத்து வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கென்று தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப மருத்துவ பரிசோதனையில குறிப்பிட்ட மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை ஊரஜிதமாகியுள்ளது.

15 வயதுடைய மாணவி பாடசாலை சீருடையுடன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருக்கின்றார் என்றும் 18 வயதுடைய பாடசாலை சீருடையுடனான மாணவனே கைது செய்யப்பட்டிருக்கின்றாரென்றும் எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம். கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை: பதற்றத்தில் 179 பயணிகள்!
Next post முன்னாள் காதலியையும், மூவரையும் வெட்டிக்கொன்ற நபர் கைது