முன்னாள் காதலியையும், மூவரையும் வெட்டிக்கொன்ற நபர் கைது

Read Time:3 Minute, 12 Second

003தனது முன்னாள் காதலி பிறிதொரு நபரை திருமணம் செய்யவுள்ளதை அறிந்து பொறாமை கொண்ட நபரொருவர் முன்னாள் காதலி, காதலியின் தாய், சகோதரி மற்றும் 3 வயது மருமகன் ஆகியோரை கோடரியால் வெட்டி படுகொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

விளம்பர முகவர் நிலையமொன்றின் உரிமையாளரான ஸியாங் ஜான் (39வயது) என்ற நபரே தனது முன்னாள் காதலியான யாங் கவோவையும் (28வயது) அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவரையும் இவ்வாறு கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளார்.

ஸியாங் ஜான் தனது மனம் கவர்ந்த பெண்ணான யாங்கோவின் மனதை வெற்றி கொள்ள பெருமளவு பணத்தை செலவழித்திருந்தார். இந்நிலையில் யாங்கவோவின் பெற்றோர் ஸியாங் ஜான் அவருக்கு பொருத்தமானவர் அல்ல என தெரிந்ததால் பெற்றோரின் அறிவுரையை செவிமடுத்த யாங்கவோ ஸியாங் ஜானுடனான காதல் தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து யாங்கவோ என்றாவது மனம் மாறி தன் காதலை மீளவும் ஏற்றுக் கொள்வார் என காத்திருந்த ஸியாங் ஜான் யாங்கவோ வேறு ஒருவரை திருமணம் செய்வதற்கு தயாராவதை அறிந்து கடும் சினத்துக்குள்ளானார்.

இந்நிலையில் அவர் யாங்கவோவின் திருமணம் தொடர்பில் கேள்விப்பட்ட அதே தினத்தில் கோடரியொன்றை கொள்வனவு செய்து வட ஷாஸ்ஸி மாகாணத்தில் ஹூவாயின் நகரிலுள்ள யாங்கவோவின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்.

இதன்போது கதவைத் திறந்த யாங்கவோவின் தாயாரை கோடரியால் வெட்டிக்கொன்ற ஸியாங் ஜான் பின்னர் யாங்கவோவையும் அவரது சகோதரியையும் வெட்டிக் கொன்றுள்ளார்.

இதனையடுத்து அந்த வீட்டை விட்டு வெளியேறுகையில் யாங்கவோவின் சின்னஞ்சிறு மருமகனைக் கண்ட அவர் அந்த பாலகனையும் கோடரியால் வெட்டிக் கொன்றுள்ளார்.

தொடர்ந்து ஒரு சாக்கு நிறைய உருளைக்கிழங்கு மற்றும் மெத்தை என்பவற்றை எடுத்துக் கொண்டு மலைப்பகுதியொன்றுக்கு சென்று அங்குள்ள குகையொன்றில் மறைந்து கொண்டார்.

இந்நிலையில் அவரை வலை வீசித் தேடிய பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். தற்போது அவர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை சீருடையுடன் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: மாணவன் கைது
Next post ஓரினச் சேர்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை, கொலை செய்து எரித்த கணவன்..