சிறுவனை சுவரில் மோதி முட்டி கொலை செய்த குற்றவாளிக்கு மரணதண்டனை
Read Time:1 Minute, 20 Second
பன்னிரண்டு வயதான சிறுவனை கொலை செய்தமை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றவாளியாகக் கண்ட மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி அந் நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அம்பேகமவைச் சேர்ந்த நளின் பிரியந்த என்ற 12 வயதான சிறுவனை சுவரொன்றில் மோதி கொலை செய்தமை தொடர்பாக அதே இடத்தைச் சேர்ந்த ஆர்.எம்.முத்து பண்டா என்ற 56 வயது நிரம்பிய நபருக்கெதிராக வெள்ளவாய பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 1993 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 20 ஆம் திகதி இக்கொலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மொனராகலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி கிகான் எய்ச் குலதுங்க முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. சாட்சியங்களினடிப்படையில் சந்தேக நபரைக் குற்றவாளியாகக் கண்ட நீதிபதி அந்நபருக்கு மரண தண்டனை வழங்கி தீ்ர்ப்பு வழங்கினார்.
Average Rating