9 வயதுடைய மகன், மகள் கொடுமை: 44 வயது தந்தை கைது
இரட்டை பிள்ளைகளான 9 வயதுடைய தனது மகனையும், மகளையும் உடல், உள ரீதியாக கொடுமைப்படுத்திய தந்தை ஒருவரை இம்மாதம் 18ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் ஹொரவப்பொத்தான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இப்பிள்ளைகளின் தந்தையின் சகோதரியான மாமி உறவு முறையான பெண் ஒருவர் ஹொரவப்பொத்தான பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவப்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரக்கேவ, அலபத்வௌயில் வசிக்கும் 44 வயதுடைய நபராகும்.
இப்பிள்ளைகளின் தாய் பிள்ளைகளை விட்டு பிரிந்து வாழ்வதுடன், இவர்கள் தந்தையின் சகோதரியின் பராமரிப்பில் வாழ்ந்து வருவதுடன் கடந்த மூன்று வருட காலமாக இப்பிள்ளைகளின் தந்தை மதுபோதையில் வீட்டுக்கு வந்து உடல், உள ரீதியாக இப்பிள்ளைகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் ஹொரவப்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating