சிறுவர்களை யாசகத்தில் (பிச்சை) ஈடுபடுத்திய பெண் கைது
Read Time:1 Minute, 12 Second
சிறார்களை யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவர், குறித்த சிறுவர்களுடன் மாத்தளை மாவட்டம் தம்புல்லை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புல்ல காவற்துறையினர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து சிறுவர்களும் பாடசாலை செல்லும் மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் மிகிந்தலை பகுதியைச் சேர்ந்தவர்கள்.
குறித்த சிறார்கள் நாளாந்தம் 1000 முதல் 1500 ரூபாய் வரையில் யாசகம் செய்து வருமானமாக பெறுவதாகவும், அதனை அந்த பெண்ணும், சிறார்களின் பெற்றோர்களும் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating