நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்
கம்பளைப் பிரதேசத்தில் பிரபல தனியார் பாடசாலையில் கல்வி கற்று வந்த 4 வயது சிறுமியை இனம் தெரியாத நபரொருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளதாக கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்பட்ட பொழுதும் பொலிஸ் நிலையத்தில் 22 ஆம் திகதியே சிறுமியின் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
சம்பவ தினம் குறித்த சிறுமியை தாயார் பாடசாலையில் அருகில் விட்டுச் சென்ற பின்னர் அவ்விடத்தில் நின்ற நபரொருவர் சிறுமியை பாடசாலைக்குள் ஒதுக்குப் புறமாக கூட்டிச் சென்றே மேற்படி குற்றத்தை புரிந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி நேற்று முன்தினம் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating