புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும், கோபியின் தாய் கைது
Read Time:1 Minute, 12 Second
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணொருவரையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இவ்விருவரும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரான செல்வநாயகம் ராசமலர் என்பவரும் அவருடன் தங்கியிருந்த மற்றுமொரு பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Average Rating