பூனை சூப் வைத்து படத்துடன் சோஷியல் மீடியாவில் சமையல் குறிப்பு வெளியிட்ட, சீனாவை சேர்ந்த இளம் பெண்
சீனாவின் குண்டாங் மாகாணத்தை சேர்ந்த இளம் பெண் லீ செங் பிங் இவர் தனது விபோ (றுநiடிழ) சீனா சோஷியல் மீடியா பக்கத்தில் உயிருடன் உள்ள பூனையை கொன்று அதன் தொல்லை உரித்து பூனையை துண்டுகளாக்கி தானே தயாரித்த சூப் படத்தை சமையல் குறிப்பு போல் வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக சக பயனர்களிடம் இருந்து அவருக்கு எச்சரிக்கை வந்து உள்ளது. இதை தொடர்ந்து அவர் தனது பக்கங்களில் உள்ள பூனை சூப் சமையில் குறிப்பை அகற்றி விட்டார்.
ஆனால், அதில் அவர் ஹேய் பாருங்கள் ! நான் ஒரு புலியை பிடிப்பேன் அதை சமைத்து சாப்பிடுவேன் என எழுதி உள்ளார்.
ஆனால் படங்களை மட்டும் எடுத்து விட்டு பூனையை எப்படி வேக வைத்தார் எவ்வாறு வெட்டினார் எனபதை விளக்கினார் அதற்கு பதில் ஒரு கூண்டுக்குள் இருக்கும் பூனையின் படம் வெளியிடபட்டு உள்ளது.
அவர் நீண்ட கோட்டுடன் கண்ணாடி அணிந்து சூப் தயாரிக்கும் இளம் பெண்ணின் .படம் இடம் பெற்று உள்ளது.
சட்டபூர்வமாகத்தான் பூனையை கொன்றேன். பூனை சூப் வைத்து சாப்பிட்டது எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் கூறி உள்ளார்.
சில பயனாளர்கள் இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை அவர் தென்கிழக்கு சீனாவின் குவாங்டாங் பகுதியை சேர்ந்தவர் அங்கு பலவகையான விலங்குகளை (கவர்ச்சியான உணவு) கொன்று சூப் வைத்து மற்றும் சமைத்து சாப்பிடும் பழக்கம் பிரபலமானது என கூறி உள்ளனர்.
சீனாவில் அதிகார பூர்வமாக பூனையை சமைத்து சாப்பிடும் வழக்கம் உள்ளது.வருடத்திற்கு அங்கு உணவுக்காக 4 லடசம் பூனைகள் கொல்லப்படுகிறது.
2012 இல் பூனை மற்றும் நாயை சமைத்து சாப்பிடுவது சட்டவிரோதம் என்றும் 15 நாட்கள ஜெயில் தண்டனை என அரசு அறிவித்தது.இருந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு பூனைகளை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Average Rating