புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு: இலங்கையருக்கு அமெரிக்காவில் சிறை..
Read Time:1 Minute, 13 Second
புலிகள் அமைப்பிற்கு பல மில்லியன் டொலர் பெறுமதியான ஏ கே 47 ரக துப்பாக்கி மற்றும் எறிகணை என்பவற்றை கொள்வனவு செய்ய முற்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு நிவ்யோர்க் நீதிமன்றம் இரண்டு வருட சிறை தண்டனை விதித்துள்ளது.
பிரதீபன் நடராஜா என்ற 37 வயதான இவர் விசாரணையின் பொருட்டு கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு செய்ய முயன்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த ஆறு பேரில் தண்டனை வழங்கப்படாதிருந்த இறுதி நபர் அவராவர்.
இவர் 2006ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதன் பொருட்டு, எப் பி ஐ உளவு சேவை அதிகாரியுடன் கலந்துரையாடி இருந்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
Average Rating