15 வயது மாணவனுடன், வகுப்பறையில் பாலியல் உறவுகொண்ட ஆசிரியை கைது..
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலத்திலுள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் கணித பாட ஆசிரியை ஒருவர் 15 வயது மாணவனுடன் வகுப்பறையில் வாய்மூல பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலி ஏன் லோங் என்ற 43 வயதான ஆசிரியையே தனது வகுப்பைச் சேர்ந்த 15 வயது மாணவனை துஷ்பிரயோகத்து உக்குள்ளாக்கியுள்ளார்.
இவ்வாசிரியை குறித்த மாணவனுடன் நீண்டகால பாலியல் தொடர்பினை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்ப்பட்டுள்ளது.
பாடசாலை வகுப்பறையில் கொரி குறித்த மாணவனுடன் தொடர்பிலிருந்தவேளை மற்றுமொரு மாணவன் கண்டு அதனை பாடசாலை ஊழியர்களிடம் தெரியப்படுத்தியதையடுத்தே இவரது தவறான உறவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தொடர்ந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய தனது கணித பாட ஆசிரியை கொரியை 6ஆம் தரத்திலிருந்து தனக்குத் தெரியும் எனவும் 2013 நவம்பர் மாதம் ஆசிரியை கொரி தன் மீது வாய் மூலம் உறவுகொண்டதாகவும் குறித்த 15 வயது மாணவன் தெரிவித்துள்ளான்.
சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியை கொரி தற்போது 30 ஆயிரம் டொலர் (சுமார் 39 இலட்சம் ரூபா) பிணையில் விடுதலையாகியுள்ளார்.
Average Rating