பஹ்ரெயினில் மோசடி; இலங்கையர் தொடர்பில் இன்டர்போல்..!
Read Time:1 Minute, 5 Second
பஹ்ரெயினில் ஆயிரக்கணக்கான டினார்களை மோசடி செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி வந்த இலங்கையர் ஒருவர் தொடர்பில் இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவற்துறையினர் விசாரணை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பஹ்ரெனியில் அவர் பணியாற்றிய சுற்றுலா நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர் இந்த நிதியை மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின் முகாமையாளர் மொஹமட் சாலி காவற்துறையில் முறைபாடு செய்திருந்தார்.
எனினும் இந்த விசாரணைகள் தாமதமடையும் நிலையில், இது தொடர்பில் இன்டர் போலின் உதவி நாடப்பட்டுள்ளதாக, த கல்ப் நியுஸ் தெரிவித்துள்ளது.
Average Rating