வசூல் வேட்டையில் சன்னி லியோனின் ‘ராகினி எம்.எம்.எஸ். 2’ வயது வந்தவர்களுக்கு மட்டும்
முன்னாள் பாலியல் பட நாயகி சன்னி லியோன் கவர்ச்சியில் வெளியான ராகினி எம்.எம்.எஸ் 2 திரைப்படம் முதல் வாரத்தில் மட்டும் 24.5 கோடி இந்திய ரூபாவினை வசூலாக ஈட்டியுள்ளது.
பொலிவூட்டில் வயதுவந்தவர்களுக்கான முதல் திகில் திரைப்படம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது. சன்னி லியோனின் படு கவர்ச்சியில் திழைக்கச் செய்யும் இப்படமானது ராகினி எம்.எம்.எஸ் 3 எப்போது எனக் கேட்கும் அளவிற்குள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (21.03.2014) வெளியான இத்திரைப்படம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் 24.5 கோடி இந்திய ரூபாவினை வசூல் செய்துள்ளமை அபரிமிதமானது. உலக இருபது20 தொடர் இப்படத்தினை பாதிக்கவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இணையத்தளத்தில் அதிகம் தேடப்படும் பிரபலங்களில் ஒருவரான சன்னி லியோனை வைத்து படக்குழுவினர் நன்கு ப்ரொமோஷன் செய்ததுடன் ட்ரெய்லர்களிலும் சன்னியின் படுசூடான காட்சிகள் மூலம் முதல் வாரத்தில் ரசிகர்களை படம் ஈர்த்துள்ளது.
ஆனாலும் கவர்ச்சிப்பேயாக நடித்துள்ள சன்னியின் கவர்ச்சியுடன் படம் குறித்து சாதகமான விமர்சனங்களும் வெளிவருதால் தொடர்ந்தும் ராகினி எம்.எம்.எஸ் 2 வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வருடத்தில் இதுவரை வெளியான ஹிந்தி திரைப்படங்களில் முதல் வாரத்தில் அதிக வசூல் வெற்ற திரைப்படங்களில் வரிசையில் ‘ராகினி எம்.எம்.எஸ் 2’ படத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
முதிலிரு இடங்களில் முறையே ஜெய் ஹோ (58.50 கோடி இந்திய ரூபா) மற்றும் கன்டே (43 கோடி இந்திய ரூபா) திரைப்படங்கள் உள்ளன.
Average Rating