தேர்தல் பிரசாரத்தில், அத்துமீறி நெருங்கிய இளைஞரை அறைந்த நக்மா..

Read Time:1 Minute, 56 Second

nagma-2இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகை நக்மா, தன்னை சூழ்ந்த கொண்ட மக்களிடமிருந்து விடுபட திணறியதுடன் அத்துமீறிய இளைஞர் ஒருவரை அறைந்துள்ளார்.

நக்மா போட்டியிடும், உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஜாலி கோதி நகரில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றது.

பிரசாரத்துக்குச் சென்ற நடிகை நக்மாவை காண்பதற்கு பெரும் எண்ணிக்கையானோர் திரண்டிருந்தனர். நக்மா அங்கு வந்தவுடன் பலர் அவரை நெருக்கமாக சூழ்ந்துகொண்டனர்.

இதன்போது தன்னை மிகவும் நெருங்க முற்பட்ட இளைஞர் ஒருவரின் கன்னத்தில் நக்மா ஓங்கி அறைந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கிருந்து புறப்படுவதற்குமுன் கூட்டத்தினரை அமைதிப்படுத்த நக்மா முயன்றபோதிலும் அம்முயற்சி அதிக பலனளிக்கவில்லை.

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் நக்மாவுக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் அங்கிருந்து அகன்றனர்.

புpரபல நடிகையும் அப்பிரதேசத்தில் ஒரேயொரு பெண் வேட்பாளராகவும் உள்ள நக்மாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் இது குறித்து பொலிஸ் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசியதகாவும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பதில் தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவின் செயல் குதிரையை குப்புறத் தள்ளி, குழிபறித்த கதை- கருணாநிதி
Next post கத்தார் நாட்டில் வளர்ப்பு மகளை பட்டினி போட்டு கொன்ற தம்பதிக்கு ஜெயில்