சாதி பிரச்சினை: கர்ப்பிணி மகளை, கௌரவக்கொலை செய்த தமிழ் தாய்
பெற்றோர் வீட்டிற்கு சென்ற தனது இளம் கர்ப்பிணி மனைவியை காணவில்லை என மதுரை உயர் நீதிமன்றில் கணவன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து விசாணைகளை மேற்கொண்ட கேணிக்கரை பொலிசாருக்கு குறித்த பெண் கண்ட துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் தெரிய வந்தது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவது,
வைதேகி வேறு சாதி ஆணை காதலித்துள்ளார் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் எதிர்ப்பையும் மீறி கடந்த வருடம் தனது காதலுடன் சென்று பதிவுத்திருமணம் செய்துவிட்டு கேரளாவில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
தனது மகள் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த தாய் கர்ப்பத்தை காரணம் காட்டி மகளை வீட்டுக்கு வருமாறு அழைத்து தனது சகோதரர்களின் உதவியுடன் கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து தாய், சகோதரன் மற்றும் ஒரு மாமனையும் கைது செய்த கேணிக்கரை பொலிசார் இவர்களுடம் நடாத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இக் கொலையுடன் மேலும் சென்னையில் இருக்கும் தாயின் இரு சகோதரர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் குறித்த இருவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக குறிப்பிட்ட பொலிசார் வைதேகியின் உடலை எரித்தார்களா அல்லது புதைத்தர்களா என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating