சிறை தண்டனையில் இருந்து தப்பிய உயர்ந்த மனிதன்
Read Time:1 Minute, 13 Second
அதிக உயரமாக வளர்ந்திருக்கும் மனிதருக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் உயரமுள்ள ஒரு மனிதருக்கு சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கும் திடீர் அதிர்ஷ்டம் தேடிவந்தது.
ஜூடி மெட்கால்ப்(23) என்ற பெயருடைய இளைஞர் 7 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர். சில குற்ற வழக்குகளில் சிக்கிய இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலுக்கு அனுப்பினார்கள்.
இவரது உயரம் ஜெயில் வாழ்க்கைக்கு ஒத்துப்போகவில்லை. காரணம் இவரது உயரத்துக்கு ஏற்றால் போல படுக்கை மற்றும் சீருடை இல்லை. எனவே இந்த குறைபாடுகளை கோர்ட்டில் சொல்லி அவருடைய வக்கீல் வாதாட, நீதிபதியும் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜூடி மெட்காலிப்பை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
Average Rating