வாளோடு திரிந்தார் எழிலன்; யாழில் சுவரொட்டிகள்..
புலிகள் அமைப்பில் எழிலன் இருந்த காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்டு வந்த குற்றச்செயல்கள் குறிப்பிட்ட சுவரொட்டி ஒன்று யாழ்.மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
எழிலன் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பெரும் பகுதியை ஆட்சேர்ப்பிலேயே செலவிட்டார்.
யுத்தத்தின் இறுதிநாட்களில் மாபெரும் போர் குற்றங்களில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளின் ஒருசில பெயர்களை சொல்லும்படி கேட்டால் அதில் நிட்சயம் எழிலனது பெயரும் இருக்கும்.
சிறார்கள் பெண்கள், இளைஞர்ளை கட்டாயமாக படைக்கிணைத்து சனங்களை தப்பிச் செல்ல விடாமல் தடுத்தும் தப்பிச் செல்ல முற்பட்டவர்களை சுட்டுக் கொன்றது போன்ற மூன்று குற்றச்சாட்டுக்களை என்னால் தயக்கமில்லாது எழிலன் மீது மேற்கொள்ள முடியும். ஏனெனில் இவற்றை நான் எனது கண்களால் கண்டுள்ளேன்.
மேலும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எழிலன் வாளோடு திரிந்தார். எனினும் அனந்தி பொய் கூறி வருகிறார் என சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சுவரொட்டியில் எழிலன் தொடர்புடைய பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. எனினும் இந்த சுவரொட்டியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பத்தி எழுத்தாளருடைய வலைப்பதிவில் இருந்து பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating