பேஸ்புக்’ சர்ச்சையில் சிக்கி பிணையில் விடுதலையான அதிபர், மீண்டும் விளக்கமறியலில்..
Read Time:1 Minute, 8 Second
‘பேஸ்புக்’ சர்ச்சையில் சிக்கி பிணையில் விடுதலையாகி இருந்த குருணாகல் சேர் ஜோன் கொத்தலாவல மகாவித்தியாலய அதிபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெகுசா இந்திவரி என்ற மாணவியின் புகைப்படம் ஒன்று முகநூலில் வெளியான போது அது தொடர்பாக மேற்படி மாணவியை தண்டித்ததால் அவர் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் சிக்கிய அதிபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் அதிபர் சாட்சிகளுக்கு பயமுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும முறைப்பாட்டையடுத்து குருநாகல் நீதவான் ரவீந்திர பிரேமரட்ன எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமபடி உத்தரவிட்டார்.
Average Rating