நீதிக்காக கூண்டுக்கள் அடைத்து கொண்ட, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி
பாகிஸ்தானின் லயாத்தை சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் தங்களை மாவட்ட பிரஸ் கிளப் முன்னதாக நீதி வேண்டும் என்று கூண்டுக்கள் அடைத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் சிறுமியை பலாத்காரம் செய்தவனை வெளியே விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
அந்நாட்டு செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, 13 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உறவினர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் சிறுமி தனது தந்தையுடன் காவல் நிலையம் சென்று தன்னை கடத்தி கற்பழித்துவிட்டதாக ராகீம் பாக்சா, முகமத் காசிம், பசிர் ஜுசைன் மற்றும் ஹாசிம்க்கு எதிராக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பசிர் மற்றும் காசிமை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் மேலிட நெருக்கடியை அடுத்து அவர்கள் கைது விடுவிக்கப்பட்டனர்.
சிறுமி கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் வீட்டில் தனியாக இருந்த போது ராகீமால் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்றும் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். பின்னர் இரண்டு மாதம் நான் கற்பமாக இருந்த நிலையில் ஜூலை 2013ல் என்னை கருகலைப்புக்கு கூட்டி செல்வதாக கூறி முகமத் காசிம் மற்றும் பசிர் ஜுசைன் மற்றும் ஹாசிம் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.
வெள்ளை தாளில் கைநாட்டும் பெற்று விட்டனர் என்று பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. போலீசார் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று குற்றவாளிகளை விட்டுவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating