வயோதிபரை மோதிவிட்டு தப்பிச் சென்ற தம்பதிகள்; காயமடைந்தவர் சிகிச்சை பயனின்றி சாவு
வீதியால் சென்று கொண்டிருந்த வயோதிபரை மோதிய மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியர், அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
வீதியில் விழுந்து கிடந்த அந்த முதியவரை உறவினர்களும், வீதியில் பயணித்த ஏனையோரும் மருத்துவமனையில் சேர்த்த போதும் அவர் அங்கு சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை உரும்பிராய் சந்தியில் காலை 7.30 மணியளவில் நடந்துள்ளது. அந்த இடத்தைச் சேர்ந்த 75 வயதுடைய வைத்தி தருமர் என்ற முதியவரே உயிரிழந்தவராவார்.
குறித்த முதியவர் மருதனார்மடம் சந்தைக்கு வாழைக் குலை கொடுத்து விட்டுத் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்தில் சிக்கியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியர் முதியவரை மோதிவிட்டு அங்கு நிற்காது தப்பிச் சென்றுள்ளனர்.
அதன்பின்னர் வீதியில் பயணித்தவர்கள் இது குறித்து முதியவரின் உறவினர்களுக்கு அறிவித்துள்ளனர். சுமார் 8.30 மணியவிலேயே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சைகள் பயனளிக்காது பிற்பகல் 1.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார். விசாரணைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
Average Rating