புதினின் விவாகரத்து சுமுகமாக முடிந்து விட்டது: அதிபர் மாளிகை தகவல்

Read Time:2 Minute, 30 Second

rusiyaரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் அவரது மனைவி லியுட்மிலா அலெக்ஸாண்ட்ரோவ்னா-வும் விவாகரத்து செய்யப் போவதாக கடந்த ஜுன் மாதம் அறிவித்தனர்.

புதின் மூலம் 2 பெண் குழந்தைகளுக்கு தாயான அவரது மனைவி லியுட்மிலா அலெக்ஸாண்ட்ரோவ்னா, இந்த அறிவிப்புக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் அதிகம் தென்படுவதை தவிர்த்து வந்தார். இவர்களின் மகள்களான மரியா மற்றும் எகடெரினா ஆகியோர் எப்படி இருப்பார்கள் என்பது கூட ரஷிய மக்களுக்கு சரியாக தெரியாது என்று கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே 61 வயதாகும் புதினை தொடர்புப்படுத்தி ரஷ்யாவில் பல காதல் கதைகள் வெளியாகின. அவற்றில் ஒன்றாக, ரஷ்யாவின் தடகள வீராங்கணையாக இருந்து, பின்னர் எம்.பி. ஆன அலினா கபேயேவா-வுடன் புதினை இணைத்து கடந்த 2008-ம் ஆண்டு ஒரு பிரபல ரஷிய பத்திரிகை கிசுகிசுத்து வந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி வரையில் தன்னைப் பற்றிய சுய விபரக் குறிப்பில் ‘மணமானவர்’ என்று குறிப்பிட்டிருந்த புதின், தற்போது மனைவியின் பெயரை நீக்கிவிட்டு, மகள்கள் இருவரின் பெயரை மட்டுமே இடம்பெற செய்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து கூறிய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் ட்மிர்ட்டி பெச்கோவ், ‘அதிபர் புதினின் விவாகரத்து சுமுகமாக முடிந்து விட்டது’ என்று தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மாளிகையின் இணையதளங்களில் இருந்தும் லியுட்மிலா அலெக்ஸாண்ட்ரோவ்னா-வைப் பற்றிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கடந்த 30 ஆண்டுகளாக தம்பதியராக இருந்த புதினும் அவரது மனிவியும் பிரிந்து விட்டதை உறுதிப்படுத்த முடிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாத்திகர்களை, பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள சவுதி மன்னர்
Next post எல்லா கதாநாயகர்களுடனும், முத்தக்காட்சியில் நடிக்க தயார்: லட்சுமி மேனன்