யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பெரியபுல்லுமலை பகுதியில் நேற்று இரவு யானை தாக்கியதன் காரணமாக பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 12.30 மணியளவில் பெரியபுல்லுமலை, மாந்தோட்டம் பகுதியில் உள்ள வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது மூன்று பிள்ளைகளின் தாயான தர்மலிங்கம் தவமணி (56வயது) என்ற பெண்னே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பலகாரம் செய்துகொண்டிருந்போது யானையொன்று வளவினுள் நுழைவதினைக்கண்டு ஓடியபோது குறித்த பெண்னை யானை தாக்கியதாக உயிரிழந்தவரின் கணவர் தெரிவித்தார்.
தான் தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஓடிய நிலையில் பின்னால் வந்த தனது மனைவியை யானை தாக்கியதாகவும் யானையினை தடுக்க பல பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் தனது மனைவியை காப்பாற்ற முடியவில்லை எனவும் தொவித்தார்.
குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating