ஆணின் விரலை வெட்டி துண்டாடிய பெண்!

Read Time:2 Minute, 3 Second

knife-04ஆணொருவரின் கை பெருவிரலை துண்டித்து விட்டு தலைமறைவாகியிருந்த பெண்ணொருவர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் குறித்த ஆணின் கையை வெட்டியபோது அவரது பெருவிரல் துண்டிக்கப்பட்டதுடன் கடுங்காயங்களுக்குள்ளானார்.

இதையடுத்து அங்கு கூடிய அயலவர்கள் துண்டிக்கப்பட்ட பெருவிரலுடன் கடுங்காயங்களுக்குள்ளான நபரை பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அந் நபர் உடனடியாக சத்திர சிகிச்சைக்குற்படுத்தி துண்டிக்கப்பட்ட கைப் பெருவிரலை இணைக்க டாக்டர்களினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயணளிக்கவில்லை. தற்போது அந் நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பதுளைப் பகுதியின் சென் ஜேம்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் குறித்த நபருக்கிடையில் நீண்ட காலமாகவிருந்தே முறுகல் நிலை நீடித்திருந்தது. சம்பவதினம் முறுகல் நிலை முற்றி மோதலாக மாறியது. இம் மோதலில் அப் பெண் கத்தியொன்றினை எடுத்து அந்நபர் கைப் பெருவிரல் துண்டிக்கப்பட்டது.

இது தொடர்பாக பதுளைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரின் பேரில் பொலிஸார் குறிப்பிட்ட பெண்ணை கைது செய்ய முற்பட்ட போது அப் பெண் தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் விசாரணைகள் தொடர்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆறு நாள் குழந்தையை குளத்தில் வீசி, முதலைகளுக்கு இரையாக்க முயற்சித்த; தாயொருவருக்கு கடூழியச் சிறை
Next post தூக்கில் தொங்கிய நிலையில், மாணவி சடலமாக மீட்பு