சிம்புவை விட்டு விலகி விட்டேன்: ஹன்சிகா
சிம்புவை விட்டு விலகி விட்டேன் என்று நடிகை ஹன்சிகா மீண்டும் உறுதிப்படுத்தினார். இருவரும் வேட்டைமன்னன், வாலு படங்களில் நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இந்த காதலை இருவருமே பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். ஆனால் இது நீடிக்கவில்லை.
சில வாரங்களிலேயே காதலில் முறிவு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து விட்டனர். காதல் முறிவுக்கு நயன்தாராவே காரணம் என கிசுகிசுக்கள் பரவி உள்ளன. சிம்புவும் நயன்தாராவும் இது நம்ம ஆளு என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர்.
இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை. இருவரும் பழைய காதலர்கள் என்பதால் சேர்ந்து நடிக்க கூடாது என்று ஹன்சிகா தடுத்ததாகவும் அதையும் மிறி ஜோடி சேர்ந்ததால் காதல் முறிந்ததாகவும் கூறப்படுகிறது.
காதல் முறிவை சிம்பு அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆனால் ஹன்சிகா எதுவும் பேசாமல் இருந்தார். ஐதராபாத்தில் அவரிடம் சிம்புவுடனான காதல் முறிவு குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர் சிம்புவை விட்டு நான் விலகி விட்டேன்.
அவரைப் பற்றி என்னிடம் இனிமேல் எதுவும் கேட்க வேண்டாம். நான் பேசவும் மாட்டேன். இப்போது என் கவனமெல்லாம் நடிப்பில் மட்டுமே இருக்கிறது என்றார்.
Average Rating