புத்த பெருமானின் உருவத்தை பச்சை குத்திய, இரண்டு பிரான்ஸ் பெண்கள் திருப்பி அனுப்பி வைப்பு
Read Time:1 Minute, 18 Second
புத்த பெருமானின் உருவத்தை உடலில் பச்சை குத்திய நிலையில் இலங்கை்கு வந்த இரண்டு பிரான்ஸ் பெண்களை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு நீர்கொழும்பு நீதவான் நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இரண்டு பெண்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமது உடலில் புத்த பெருமானின் உருவத்தை பச்சைக் குத்திய குறித்த பெண்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த போது கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், அவர்கள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், இருவரையும் நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Average Rating