கொழும்பில் வழிகேட்ட, கார் சாரதி செய்த அநியாயம்..!!
கார் சாரதியொருவர் பெண்ணொருவரிடம் வழிக்கேட்டு விட்டு அப்பெண்ணையே விழிபிதுங்க வைத்த சம்பவமொன்று கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ளது.
அவசர அவசரமாக காரியாயலயத்திற்கு சென்றுகொண்டிருந்த பெண்ணுக்கு அருகில் காரொன்று வந்து நின்றுள்ளது.
அந்த காரின் சாரதி குறித்த பெண்ணிடம் சிங்கள மொழியில் வழிகேட்டுள்ளார். கார் சாரதி உயர்பதவி வகிப்பவர் போல தோற்றமளித்ததால் அந்த பெண்ணும் வழியை கூறிவிட்டு காருக்கு முன்பாக விரைந்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு அருகில் மீண்டும் காரை நிறுத்திய சாரதி அதேவழியை மீண்டும் கேட்டுள்ளார்.
தான் கூறியது அவருக்கு விளங்கவில்லையோ என்று எண்ணிய அப்பெண் சாரதிபக்க ஜன்னல் வழியாக பாதைபற்றி விபரித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த சாரதி தன்னுடைய அந்தரங்க உறுப்பை காண்பித்துள்ளார். சற்றும் எதிர்பாராத அந்தப்பெண் திகைத்து நிற்கையில் காரின் சாரதியோ காரை தான் கேட்ட பாதையில் காரை செலுத்தாமல் வேறுபாதையில் காரை செலுத்தி சென்று விட்டார்.
மனிதாபிமான நோக்கில் சில உதவிகளை செய்யும் போது முகம்சுழிக்க வைக்கும் சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை. சாரதிக்கு வழி கூறிய அப்பெண்ணோ தனக்கு நேர்ந்ததை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நொந்து கொண்டார்.
Average Rating