விமானத்தை பைலட்கள் கடத்தவில்லை, பயணிகள் எங்கோ உயிருடன் உள்ளனர்: மாஜி சிப்பந்தி

Read Time:1 Minute, 53 Second

04-malaysia-airlines11-600-jpgமலேசிய விமானத்தை சிப்பந்திகள் கடத்தி இருக்க மாட்டார்கள் என்றும், பயணிகள் உயிருடன் இருக்கக்கூடும் என்று முன்னாள் மலேசிய ஏர்லைன்ஸ் சிப்பந்தி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. பின்னர் அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.

இந்நிலையில் விமானம் கடலுக்குள் விழ விமான சிப்பந்திகள் மற்றும் விமானிகள் காரணமாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மாயமான விமானத்தில் இருந்த சிப்பந்திகளுக்கு பழக்கமான முன்னாள் மலேசிய ஏர்லைன்ஸ் சிப்பந்தி பேட்ரிக் சவ் என்பவர் கூறுகையில், மலேசிய விமானம் மாயமானதற்கு சிப்பந்திகள் காரணமாக இருக்க மாட்டார்கள்.

மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன் என்றார். விமானம் மாயமான விவகாரத்தில் மலேசியா எதையோ மறைக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பேட்ரிக் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உல்லாசமாக ஓர் உலக சாதனை!! (PHOTOS)
Next post பாகிஸ்தானில் விளையாட்டு பொம்மை குண்டு வெடித்து சிறுவன் பலி