விடுதலை புலிகளை பழி வாங்குவதில், சோனியா தீவிரம் காட்டினார்: இலங்கை பத்திரிகை தகவல்

Read Time:1 Minute, 38 Second

Karunanidhi, chief minister of Tamil Naidu, speaks with Sonia Gandhi in Chennaiஇலங்கையில் இருந்து வெளிவரும் ‘திவயின’ என்ற பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:–

”முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். தனது கணவரான ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப்புலிகளை பழி தீர்த்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி விரும்பினார். எனவே, அவர்களை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

குறிப்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் மீது சோனியா கடும் விரோதம் காட்டினார். போரை முடிவுக்கு கொண்டு வர சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்த போதிலும் இந்தியா அதற்கு இடமளிக்க வில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை இந்திய பத்திரிகை நிருபர் சாம் ராஜப்பா என்பவர் வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் வழிகேட்ட, கார் சாரதி செய்த அநியாயம்..!!
Next post கின்னஸ் சாதனைக்கான ஸ்கை டைவிங் முயற்சி: பாராசூட் விரியாததால் பெண் பலி