போதையில் நிர்வாணமாக ஓடியவருக்கு 7 மாத சிறை

Read Time:2 Minute, 10 Second

2b80c306-45f0-4991-a7e0-cc45ed006cf9_S_secvpfதுபாயில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கும் செயற்கை தீவான பாம் சுபைராவில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெற்ற மது விருந்தில் இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலாவாசியான ரிச்சர்ட் ஸ்டாப்லர்(33) என்பவர் கலந்து கொண்டார்.

சுமார் 8 கிளாஸ் ‘ரம்’மை காலி செய்த அவர், போதை மிகுதியில் நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறிய நிலையில், ஆடைகளை எல்லாம் களைந்துவிட்டு ஓட்டல் ஊழியர்களுடன் தகராறு செய்யத் தொடங்கினார்.

அவர்கள் போலீசில் புகார் அளிப்பதை அறிந்து, அந்த இடத்தில் இருந்து நழுவி ஓடிய ரிச்சர்ட் ஸ்டாப்லர், தனது அடுக்கு மாடி குடியிருப்புக்கு நிர்வாணமாக சென்று, அந்த குடியிருப்பை சுற்றிச் சுற்றி நிர்வாணமாக ஓடினார். பின்னர், வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்ட அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

இது தொடர்பாக நடைபெற்று வந்த விசாரணையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அநாகரிகமான முறையில் நிர்வாணமாக ஓடிய குற்றத்துக்காக 6 மாதமும், மது அருந்தியதற்காக ஒரு மாதமும் என மொத்தம் 7 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தண்டனை காலம் முடிந்த பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்று துபாய் குடியுரிமைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள், இலங்கை வர தடை
Next post முகத்தில் அமிலத்தை வீசி கொன்று விடுவதாக, டைரக்டர் பி.ரவிக்குமார் மிரட்டுகிறார் -நடிகை சுஜிபாலா