140 டாலர் கேட்டா.. 37 ஆயிரம் டாலரை கொட்டிய யு.எஸ். ஏ.டி.எம்.!

Read Time:1 Minute, 37 Second

money64இயந்திரத்தில் 140 டாலரை கேட்ட நபருக்கு 37 ஆயிரம் டாலரை அள்ளிக் கொட்டிக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு போட்லாண்ட் மெயின் என்ற இடத்தில் டிடி வங்கியின் ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க ஒரு பெண் சென்றுள்ளார். ஆனால் உள்ளே இருந்த நபர் நீண்ட நேரமாகியும் வெளியே வராமலேயே இருந்திருக்கிறார்.

இதனால் கடுப்பாகிப் போன அந்த பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த போலீசார் ஏ.டி.எம்க்குள் சென்று பார்த்த போது திடுக்கிட்டுப் போயினர்.

உள்ளே இருந்த நபர் தமது பைகளில் 37 ஆயிரம் டாலரை திணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 140 டாலர்தான் நான் கேட்டேன்..ஆனால் இந்த ஏ.டி.எம் மிஷின் தான் எனக்கு 37 ஆயிரம் டாலரை கொட்டிக் கொடுத்தது என்று கூலாக கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு டிடி வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏ.டி.எம்.இயந்திரத்தில் கோளாறு இருந்ததாலேயே இவ்வளவு பணத்தை அள்ளிக் கொடுத்தது என்று பின்னர் தெரியவந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “ராமர் சீதையை சந்தேகப்பட்டாலும், தமிழர் தென் ஆபிரிக்காவை சந்தேகப்பட கூடாது!” -சம்பந்தன்
Next post நவி பிள்ளையின் நாயைக் கூட, இலங்கையில் விசாரணை மேற்கொள்ள அனுமதியோம் –நிமல் சிறிபால