காணாமற்போன பெண் சடலமாக மீட்பு; கணவர் கொலை செய்தமை உறுதி
Read Time:1 Minute, 7 Second
காலி எல்பிட்டிய பகுதியில் காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பெண் ஒருவரின் சடலம் காட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
18 வயதான குறித்த பெண் காணாமற்போனதாக கடந்த 25 ஆம் திகதி எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இவர் தமது கணவரால் வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
24 வயதுடைய குறித்த சந்தேகநபர் சடலத்தை வீட்டுக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் சுவரிலிருந்த இரத்தக் கறையை அடிப்படையாக கொண்டு சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Average Rating