கொடூர தாயின் போதை, குழந்தையின் உயிரை பறித்தது
Read Time:1 Minute, 11 Second
அமெரிக்காவில் போதை மாத்திரை சாப்பிட்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கரோலின மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டீபன் கிரினி என்ற பெண் பல டாக்டர்கலிடம் பொய்யான காரணங்களை கூறி போதை மாத்திரைகள் பெற்றுள்ளார்.
அவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு பிறந்து 46 நாட்களே ஆன குழந்தைக்கு அவர் தாய்ப்பால் கொடுத்ததால் குழந்தை இறந்து விட்டது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவர் மீது கொலை, குழந்தை வளர்ப்பில் கவனக்குறைவாக இருத்தல் போன்ற பல பிரிவிகளில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த ஸ்பார்டன் பர்க் நீதி மன்றம் அவர்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
Average Rating