எல்.ரீ.ரீ.ஈ இயக்க மூவர் பற்றிய, தகவல் தெரிந்தால் 10 லட்சம் பரிசு

Read Time:2 Minute, 9 Second

000000பொலிஸாரினால் தேடப்படும் குற்றவாளிகள் எனும் தலைப்பில் மட்டக்களப்பு மண்முனை பிரதேசத்தில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

அச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1. கோபி

இவர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் கஜீபன் பொன்னய்யா செல்வநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் என அழைக்கப்பட்டவர். வயது 31. ஆறு அடி உயரமுடைய இவர் பொது நிற தோற்றத்தையும் கொண்டவர்.

இவரது முகத்தில் இடதுபக்க உதட்டின் மேல் பகுதியில் வெட்டுக்காயத்துக்கு குள்ளான வடுவொன்று உள்ளது.

2. அப்பன்

இவர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் நவரெத்தினம் நவநீதன் அல்லது அப்பன் என அழைக்கப்பட்டவர். வயது 36. ஐந்து அடி 02 அங்குலம் உடையவர். பொது நிற தோற்றத்தையும் கொண்டவர்.

3. தேவியன்

இவர் ராதா படையணியின் விமானி ஆவதோடு அனுராதபுரம் விமானப்படை முகாமை தாக்கிய விமரனிகளில் ஒருவர் ஆவார். இவர் தேவியன் எனப்படும் எல்.ரீ.ரீ.ஈ. பெயரால் அழைக்கப்படுபவர் ஆவார்.

இவர்கள் பற்றிய தகவல் ஏதும் கிடைக்குமிடத்து 0112451636 எனப்படும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ 0112321838 எனப்படும் தொலைநகல் இலக்கத்தின் ஊடகவோ அறியத்தருமாறு பொது மக்களிடம் வேண்டிக் கொள்கின்றோம் என அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரியான தகவலை வழங்குபவருக்கு பத்து இலட்சம் வரை சன்மானம் வழக்கப்படுவதோடு தகவலாளி பற்றிய இரகசியம் பேனப்படும் என தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடூர தாயின் போதை, குழந்தையின் உயிரை பறித்தது
Next post பிரபுதேவா நைட் பார்ட்டி: நயனுக்கு அழைப்பு இல்லை