சவுதியில் இந்தியர் அடித்துக் கொலை
Read Time:1 Minute, 25 Second
சவுதியின் மக்கா நகரம் அருகேயுள்ள ஜெத்தா பகுதியில் இருக்கும் ‘ஹார்ட்வேர்’ கடையில் கேரளாவை சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் என்பவர் பணியாற்றி வந்தார்.
விடுமுறையில் தாய்நாடு சென்றுவிட்டு சமீபத்தில் வேலைக்கு திரும்பிய அவருக்கும், அவருடன் அதே கடையில் வேலை செய்து, ஒரே அறையில் வசித்து வந்த அவரது உறவினரான இன்னொருவருக்கும் குடும்ப பிரச்சனை தொடர்பாக கடந்த வாரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் சூடேறி, கைகலப்பாக மாறியதில் ஆத்திரமடைந்த இருவரும் ஆவேசமாக தாக்கிக் கொண்டனர். இதில் அப்பாஸ் மொய்தீனின் மண்டை இரண்டாக பிளந்தது. கடந்த 5 நாட்களாக ஜெத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மக்கா வட்டார போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அவரை தாக்கிய உறவினர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Average Rating